தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம்-தமிழ் படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகன் மக்பூல் சல்மானும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். மலையாளத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்ட அவர், சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், கண்களால் ஒரு கவிதை -என்ற படம் மூலம் அவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மானுக்கு ஜோடியாக அக்ஷா பட் நடித்துள்ளார். இவர் அர்ஜூன். ஷாம் நடித்த ஒரு மெல்லிய கோடு படத்தில் நாயகியாக நடித்தவர். காதல் மற்றும் காமெடி கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கண்களால் ஒரு கவிதை படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.