'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம்-தமிழ் படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகன் மக்பூல் சல்மானும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். மலையாளத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்ட அவர், சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், கண்களால் ஒரு கவிதை -என்ற படம் மூலம் அவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மானுக்கு ஜோடியாக அக்ஷா பட் நடித்துள்ளார். இவர் அர்ஜூன். ஷாம் நடித்த ஒரு மெல்லிய கோடு படத்தில் நாயகியாக நடித்தவர். காதல் மற்றும் காமெடி கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கண்களால் ஒரு கவிதை படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.