ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம்-தமிழ் படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகன் மக்பூல் சல்மானும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். மலையாளத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்ட அவர், சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், கண்களால் ஒரு கவிதை -என்ற படம் மூலம் அவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மானுக்கு ஜோடியாக அக்ஷா பட் நடித்துள்ளார். இவர் அர்ஜூன். ஷாம் நடித்த ஒரு மெல்லிய கோடு படத்தில் நாயகியாக நடித்தவர். காதல் மற்றும் காமெடி கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கண்களால் ஒரு கவிதை படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.