மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாடகியாகவும், நடிகையாகவும் தமிழில் வலம் வரும் ஆண்ட்ரியா போன்று பஞ்சாபில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ருஹானி சர்மா. பஞ்சாபி படங்களில் பாடி வருகிறார், இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். 2013ம் ஆண்டு முதல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ருஹானி சர்மா பரத் நடிக்கும் 'கடைசி பென்ஞ் கார்த்திக்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ரவி பார்கவன் இயக்கும் இந்தப் படத்தில் ருஹானி சர்மா கல்லூரி மாணவியாகவும், பரத் காதலியாகவும் நடிக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார். அவர் இன்னும் தேர்வாகவில்லை. தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து சென்னை, பெங்களூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
“தமிழ் இண்டஸ்ட்ரி பற்றி அதிகமாக தெரியாது. ஆனால் ரஜினி, கமல், மணிரத்னம் தெரியும். அவர்கள் படம் பார்த்திருக்கிறேன். இப்போது ஏ.ஆர்.முருகதாசையும் தெரியும். தமிழ் மக்கள் சினிமாவை பெஸ்டிவல் மாதிரி கொண்டாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு மொழியில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ருஹானி சர்மா.