டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தலைப்பைப் பார்த்ததும் கிசுகிசு செய்தி என நினைத்தால் நயன்தாரா பற்றிய கிசுகிசுக்களை அதிகம் விரும்பிப் படிப்பவர் நாம் என நீங்களாகவே புரிந்து கொள்ளலாம். மீஞ்சுர் கோபி, இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என நீண்ட நெடிய குரல் எழுப்பியவர் மீஞ்சுர் கோபி. 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'மெட்ராஸ்' படத்தின் கதையும் தன்னுடையதுதான் என்றும் கோபி கூறிவந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பினார்கள். அதன் பின் என்ன காரணத்தாலோ கோபியும் அவற்றிலிருந்து பின் வாங்கினார். 'கத்தி' படமும் 'மெட்ராஸ்' படமும் சமூகப் பிரச்சனைகளை ஆராய்ந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீஞ்சுர் கோபி சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது பற்றிய செய்தி நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நயன்தாரா அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது திரையுலகத்தில் உள்ள சிலருக்குக் கூடப் புதிய செய்திதான். பலருக்கு இந்த செய்தி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, நயன்தாரா பற்றி எந்த அளவிற்கு கிசுகிசு வருகிறதோ, அதற்கு நேர்மாறாக பலருக்கும் உதவி செய்யும் குணம் கொண்டவர். அவர் உதவி செய்வதை வெளியில் கூட சொல்ல மாட்டார் என்கிறார்கள். கோபி பற்றி கேள்விப்பட்ட அவர், கோபி சொன்ன கதையில் ஈர்க்கப்பட்டு உடனடியாக அவருக்கு ஆதரவு அளிப்பதற்காகவே அந்தப் படத்தில் நடித்து வருகிறார் என்கிறார்கள். இது முன்னாடியே தெரிந்திருந்தால் அவரை அந்தப் படத்தில் நடிக்க விடாமல் தடுப்பதற்கும் சிலர் முயற்சித்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.