ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ளது 'இருமுகன்'. 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. செப்டம்பரில் படம் வெளியாகலாம் என்று தெரிகிறது. இது ஒரு சயின்ஸ்பிக்ஷன் படம் என்கிறார் ஆனந்த் ஷங்கர் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
'இருமுகன்' பக்கா கமர்ஷியல் படம். ஆனால் வழக்கமான கமர்ஷியல் படம் அல்ல. விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று திருநங்கை வேடம் என்ற வந்த செய்திகளில் உண்மை இல்லை. இரண்டு கெட்அப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று ரா உளவுப்பரிவு அதிகாரி. இன்னொரு கெட்அப் மிகவும் ரகசியமானது.