ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல், ராதா, சுலக்ஷனா, யமுனா நடித்த படம் 'தூங்காதே தம்பி தூங்காதே' எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாக எடுக்க எஸ்.பி.முத்துராமன் திட்டமிட்டிருந்தார். அப்போது 'இதயம் பேசுகிறது' ஆசிரியர் மணியன் எஸ்.பி.முத்துராமனையும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனையும் சந்தித்து. “நான் தில் ஹா ஹீரா” என்ற இந்திப் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தேன். கிளைமாக்சையும் பிரமாண்டமாக எடுத்தேன். அந்த படம் ஓடவில்லை. அதிகமாக யாரும் பார்க்கவில்லை. அந்த கிளைமாக்சை வேண்டுமானால் நீங்கள் அப்படியே பயன்படுத்திக் கொள்ளாலாம்” என்றார்.
படத்தை பார்த்த எஸ்.பி.முத்துராமனுக்கு பிடித்திருந்தது. இந்த கதைக்கு இந்தி படத்தின் கி¬மாக்சை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அந்த கிளைமாக்சில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் மோதுவது, கார் வெடித்து சிதறவது, குண்டுக் வெடித்து சிதறுவது மாதிரியான காட்சிகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டார்கள். அதோடு கமல் நடிப்பையும் இணைத்தார்கள். நினைத்தது போலவே கிளைமாக்ஸ் பிரமாண்டமாக அமைந்தது. இந்தி படத்தின் கிளைமாக்ஸ் தமிழில் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.