ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடிக்க முடிவெடுத்தார். இரண்டு வருடங்களாக கதை கிடைக்காமல் தவித்த சிரஞ்சீவி வேறுவழியின்றி தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகிவரும் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நாயகியை படக்குழு தீவிரமாக தேடியது.
சிரஞ்சீவியுடன் நடிக்க அனுஷ்கா, நயன்தாரா என முன்னணி நடிகைகளை அணுகியபோது, அவர்கள் சம்பளம் அதிகமாக கேட்டதால் பாலிவுட்டிலிருந்து நாயகியை இறக்க இயக்குனர் திட்டமிட்டார். சிரஞ்சீவியின் இணையாக பாலிவுட்டிலும் நாயகி கிடைக்காததால் காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் காஜல் அகர்வாலுக்கு ரூ 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படக்குழுவினர் இத்தகவலை விரைவில் உறுதி செய்வர் என டோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.