ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்து நான்கு மதங்கள் முழுதாக முடிவடைந்துவிட்ட நிலையில் அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க திணறி வருகின்றனர். கலாபவன் மணியின் உடலில் மரணத்தை விளைவிக்கும் நஞ்சு கலக்கப்பட்டு இருந்தது என்கிற ரிப்போர்ட் ஐதராபாத்தில் இருந்து வந்தபின்னும் போலீஸார் அதுகுறித்த விசாரணையில் அக்கறை காட்டாமலே இருந்துவந்தனர். இதனால் தொடர்ந்து கலாபவன் மணியின் குடும்பத்தினர் போலீஸாரின் மெத்தனம் பற்றி மீடியாக்களில் புகார் வாசிக்க ஆரம்பித்தனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து மேலிடத்தில் இருந்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவு பறந்துள்ளது. இதன் நடவடிக்கையாக கலாபவன் மணியின் நெருங்கிய நண்பர்களில் அவரது மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகப்படக்கூடிய ஆறு பேருக்கு 'லை டிடெக்டிங்' எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. இதிலும் பெரிய முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் இதுநாள்வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 290 பேருக்கும் இந்த சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.