ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சிம்பு-கெளதம்மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து அவர்கள் தற்போது இணைந்துள்ள படம் ‛அச்சம் என்பது மடமையடா'. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படடது. அதற்கு காரணம், பேசினபடி கெளதம்மேனன் சம்பளம் தராததால் சிம்பு படப்பிடிப்பில கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அதனால் அச்சம் என்பது மடமையடா படத்தை நிறுத்தி வைத்து விட்டு, தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார் கெளதம்மேனன்.
இந்நிலையில், தற்போது சிம்புவும் டிரிபிள் ஏ படத்தில் பிசியாகி விட்டார். ஆனபோதும், அச்சம் என்பது மடமையடா படத்தை வெளியிடும் வேலைகளில் கெளதம்மேனன் இறங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிப்போகாதே பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். சம்பளம் தராமல் அந்த பாடலில் நடிக்க சிம்பு வரமாட்டார் என்பதால், அந்த பாடலே இல்லாமல் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.