ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அரவிந்த்ராஜ். இவர் தற்போது கவிதை என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரேயொரு பெண்ணை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அந்த பெண் அவரது மகள் மகா கீர்த்தி, விஸ்கம் படித்தவர். சுனாமியில் சிக்கிய ஒரு பெண் தப்பிக்க போட்டில் ஏறியபோது அந்த போட்டுடன் அவள் மண்ணுக்குள் சிக்கிக்கொள்கிறாள். அவளது கையில் செல்போன் மட்டும் இருக்குமாம். 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட அந்த போட்டுக்குள் இருக்கும் அந்த பெண், எப்படி வெளியில் வருகிறாள் என்பதுதான் கதையாம். இந்த படத்தில் இரண்டு பாடல்களும் உள்ளதாம்.
இந்த படத்துக்காக, மண்ணுக்குள் போட்டை செட் பண்ணி பலகைகளுக்கு இடையில் கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார்களாம். 15 நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் முழுக்க கேமராவை கையில் வைத்தபடி படமாக்கிய இவர், ஒரு டார்ச் லைட், இரண்டு சின்ன டியூப் லைட், இரண்டு எல்இடி லைட் ஆகியவற்றை வைத்தே முழுப்படத்தையும் படமாக்கினாராம். இப்படி மண்ணுக்குள் புதைந்த போட்டுக்குள் சிக்கிய ஒரு பெண்ணை வைத்து முழுப்படத்தையும் இயக்கியுள்ள அரவிந்த்ராஜ், போராடிக்காத வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறாராம். அதனால் இந்த படம் வெளியாகும்போது பெரிய பரபரப்பை உருவாக்கும் என்கிறார்கள்.