‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நான்ஈ படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் சுதீப். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி -என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதையடுத்தும் தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அதோடு, ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசித்ரம் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும், தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டேன். அடுத்து அஜித்துடன் நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறும் சுதீப், மற்ற நடிகர் நடிகைகளை மதிக்கும் அஜித்தின் கேரக்டர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. முக்கியமாக, ஒரு ஹீரோ இந்த மாதிரிதான் நடிக்க வேண்டும் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து என்னை மட்டுமின்றி பெருவாரியான இந்திய நடிகர்களை கவர்ந்திருப்பவர் அஜித். அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது என்கிறார் சுதீப்.