மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் ஐநா.,வில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அன்று ஐநா., வளாக அரங்கில், மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து இந்தியாவிற்கான ஐநா., தூதர் சையது அக்பருதீன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐநா.,வில் ஜெய் ஹோ எதிரொலிக்க போகிறது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தன்று எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐநா.,வில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் படங்கள் ஐநா தலைமையகத்தில் போஸ்டராக வைக்கப்பட்டுள்ளன.
உலகத் தலைவர்கள் பலர் உரை நிகழ்த்திய, இசை மேதைகள் பலர் நிகழ்ச்சி நடத்திய ஐநா மேடையில் ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐநா., வில் நிகழ்ச்சி நடத்தும் இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் தான். ஐ.நா., அரங்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1966ம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். அவரது இசை நிகழ்ச்சி நடந்ததன் பொன்விழாவும் இந்த ஆண்டு சேர்ந்துள்ளது மற்றொரு தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.