சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்ட்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை(ஜூலை 29) முதல் துவங்குகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மகேஷ் பாபு படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை பாடலுடன் துவங்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதாம். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன. மேலும் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொதுவான தலைப்பையே படத்திற்கு வைக்க இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் முடிவு செய்துள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 8ல் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.