பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் நான்கு படங்கள் ரிலீசாகின. இந்த நான்கில் பிஜூமேனன்-ஆசிப் அலி இணைந்து நடித்த' 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்கிற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எந்த அளவுக்கு என்றால் சமீபத்தில் கேரளாவில் வெளியான 'கபாலி'க்காக மம்முட்டி நடித்த 'கசபா' உட்பட மற்ற மூன்று படங்களுக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை, காட்சிகளின் எண்ணிக்கை நிறையவே குறைக்கப்பட, இந்தப்படம் மட்டும் வழக்கம்போல காட்சிகள் குறைக்கப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இந்தப்படத்தில் ரசிகர்களை வசீகரிக்கும் அம்சங்கள் நிறைய இருந்தாலும் படம் பார்த்த அனைவரும் தவறாமல் முதலில் குறிப்பிடுவது படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ரஜிஷா விஜயன் பற்றித்தான்.. சின்னத்திரையில் தேவயானி பங்கேற்கும் 'உக்ரம் உஜ்வலம்' என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவர் ஏற்கனவே ரசிகர்களின் வீடுகளில் நன்கு அறிமுகம் ஆனவர்தான். வெள்ளித்திரையில் இது முதல் படம் என்றாலும் நடிப்பில் அட்டகாசமாக பண்ணியிருந்தார்.. இந்தப்படத்தில் தன்னை புறக்கணிக்கும் காதலனான ஆசிப் அலியிடம் அவ்வப்போது அழுதபடியே கெஞ்சி, கொஞ்சி தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்வார் ரஜிஷா. ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுகையுடன் அற்புதமாக நடித்து மிரட்டி அப்ளாஸ் வாங்கிவிட்டார்.
அதனால் இவரையே டப்பிங் பேசவைத்து விடலாம் என முடிவு செய்த இயக்குனர் காலித் ரஹ்மான் இவரை டப்பிங் தியேட்டரில் கொண்டுபோய் நிறுத்த மிரண்டு விட்டாராம் ரஜிஷா. ஷூட்டிங் ஸ்பாட்டில் அததனைபேர் முன்னாள் வந்த அழுகை இங்கே யாருமிலாத இடத்தில் வரமறுத்தது.. வேறு யாரையாவது டப்பிங் பேசவையுங்களேன் என கெஞ்சியும் கூட இயக்குனர் விடவில்லையாம். ரஜிஷாவுக்கு தன்னம்பிக்கை ஊட்டி டப்பிங் நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து அழக்காக டப்பிங் பேசவைத்துவிட்டாராம். பின்னர் படமாக பார்த்தபோது நானா இப்படி பேசினேன் என ஆச்சர்யப்பட்டு போனாராம் ரஜிஷா..
பின்குறிப்பு ; 'பிரேமம்' மலர் மற்றும் செலின் ஆகியோருக்கு அடுத்த இடம் இவருக்குத்தான் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.