'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரைப்படங்களுக்கு தலைப்பு வைப்பதிலிருந்தே வில்லங்கம் ஆரம்பித்து விடும். ஒரு படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, சேம்பர் ஆகியவற்றில் பதிவு செய்யலாம். ஆனால் எந்த சங்கத்துக்கு சென்று எந்த தலைப்பை பதிவுக்கு கொடுத்தாலும் அது ஏற்கெனவே பதிவான தலைப்பா என்று பார்த்து சொல்வதற்கே மாத கணக்கில் ஆகும். அப்புறம் இது வேறொருவர் பதிவு செய்திருக்கிறார் இவ்வளவு பணம் கொடுத்தால் அவரிடமிருந்து வாங்கித் தருகிறோம் என்பார்கள். இப்படி ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து வருகிறது.
இதனால் படத் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் நடக்காது என்று இயக்குனர்கள் சங்கமம் கடந்த பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இதனை 3 சங்கங்களும் கேட்பதாக இல்லை. இதனால் வெறுத்துப்போன இயக்குனர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் விக்ரமன் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு படையெடுத்து வந்தனர். சேம்பர் கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றார்கள். திடீரென “தலைப்பை ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும், இயக்குனர்களுக்கு மரியாதை வேண்டும்” என்று கோஷமிட்டனர். சுமார் 30 நிமிடம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த பொதுச் செயலாளர் டி.சிவா, பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோரிடம் கொடுத்துச் சென்றார்.
இதுகுறித்து விக்ரமன் கூறியதாவது: ஆன்லைனில் தலைப்பை பதிவு செய்யுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் முறைகேடுகளுக்கு சங்கங்களும் உடந்தையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். என்றார்.