மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மாயவரத்து பொண்ணு ப்ரியா ஆனந்த். 'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா, அதன் பிறகு 'புகைப்படம்', 'குளிர் 180', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை' படங்களில் நடித்தார். இடையில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' உள்பட சில இந்திப் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இவர் நடித்த 'அரிமா நம்பி', 'இரும்பு குதிரை', 'வை ராஜா வை' படங்கள் ஹிட்டானாலும் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் 'முத்துராமலிங்கம்', 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படங்களில் நடித்து வருதுகிறார்.
இந்த நிலையில் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிமுகமாகிறார். 'எஸ்ரா' என்ற மலையாள திகில் படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார். கன்னடத்தில் புனித்ராஜ்குமாருடன் 'ராஜ்குமாரா' என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி ப்ரியா ஆனந்த் கூறியதாவது:
மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்றிது. அதுவும் இரு மொழியின் முக்கியமான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் நடிக்க வாய்ப்பில்லாத ஹீரோயின் என்கிற பெயரில் ஹீரோ பின்னால் சுற்றுகிற கேரக்டர்களாகவே இருக்கிறது. அதனால்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். என்றார்.