மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை நயன்தாரா சீனியர் நடிகர் வெங்கடேசுடன் 'பாபு பங்காரம்' படத்தில் நடித்துள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக இந்த படம் இடையில் சில மாதங்கள் நின்று போனது. இதனால் நயன்தாரா கொடுத்திருந்த காஷ்சீட்டும் முடிந்து விட்டது. நயன்தாரா ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்து கொடுக்க வேண்டியது இருந்தது. “உங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வீணடித்து விட்டீர்கள். நான் தற்போது மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் வேறு வழியில்லாமல் பாடல் காட்சி இல்லாமலேயே படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டனர். ஆந்திர மாநில தயாரிப்பாளர் சங்க முடிவின்படி ஒரு படத்தின் புரமோசனில் படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். ஆனால் 'பாபு பங்காரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நயன்தாரா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் அதிருப்தி அடைந்த வெங்கடேசும் தயாரிப்பாளரும், நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளனர். நயன்தாரா தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக இருப்பதால் இங்கும் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.