ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து விட்டு, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் தமிழுக்கு வந்தவர் சிம்ரன். அந்த படத்தையடுத்து விஜபி, நேருக்கு நேர், வாலி என நடித்து தமிழில் வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையாகி விட்டார் சிம்ரன். ஆனபோதும், எல்லா நடிகை களையும் போலவே அவருக்கும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. அதன்காரணமாக மார்க்கெட்டை பிடிக்க, படம் தயாரித்து நடிக்கப்போவதாக கதைகள் கேட்டு வந்தார். ஆனபோதும் அந்த முயற்சியில் இறங்கவில்லை.
பின்னர், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், மாஜி ஹீரோயினிகளான ராதிகா, சரண்யா, ஊர்வசி, நதியா, ரம்யாகிருஷ்ணன் போன்றோருக்கு கிடைப்பது மாதிரியான அழுத்தமான வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், தொடர்ந்து புதிய படவாய்ப்புகளுக்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் சிம்ரன், தற்போது தனது மூத்த மகன் அதீப்புடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மகனுக்கேற்ற நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்க வைக்கவும் சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் சிம்ரன்.