ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காக்கா முட்டை' படத்தின் மூலம் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் மணிகண்டன். தான் சொல்ல நினைத்ததை தன்னுடைய முதல் படத்தில் அழுத்தமாக பதிவு செய்த மணிகண்டன், ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். 'காக்கா முட்டை' படத்தை தனுஷும், ஃபாக்ஸ் ஸ்டார் கம்பெனியும் மிகத்தெளிவாக மார்க்கெட்டிங் செய்ததால் மிகப்பெரிய வசூலை அள்ளியது. அதோடு, இப்படம் தேசிய விருதையும் வென்றது. இப்போது மணிகண்டனின் அடுத்த படமாக 'குற்றமே தண்டனை' படம் தயாராகி, ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படமும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அதோடு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. குற்றமே தண்டனை படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிக்கும் 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கி வருகிறார் மணிகண்டன். முந்தைய படங்களைப்போலவே இந்தப்படமும் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்படுகிறதா என மணிகண்டனிடம் கேட்டால், இது அவார்டுக்காக எடுக்கப்படும் படம் அல்ல, பக்காவான ஆக்ஷன் படம் என்று சொல்கிறார். போலி பாஸ்போர்ட் கதைக்களத்தை பின்னணியாகக் கொண்ட 'ஆண்டவன் கட்டளை' ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் அவர் கூடுதல் விவரத்தையும் தெரிவித்துள்ளார்.