பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தயாருமான ரெஹைனா அடிப்படையில் ஒரு பாடகி. ஆரம்பத்தில் தன்னுடைய தம்பியின் இசையில் கோரஸ் பாடி வந்தார். பின்னர், ஸோலோவாக சில பாடல்களையும் பாடினார்.
குறிப்பாக மல மல மருதமலை என்ற சூப்பர்ஹிட் பாடலைப் பாடியவர் இவர்தான். பாடகியான இவர் திடீரென துஷ்யந்த் ஹீரோவாக நடித்த 'மச்சி' என்ற படத்துக்கு இசையமைத்தார். பிறகு, 'ஆடாத ஆட்டமெல்லாம்', 'என்னை ஏதோ செய்து விட்டாய்' உட்பட சில படங்களுக்கும் இசை அமைத்திருக்கும் ரெஹைனாவுக்கு தற்போது தயாரிப்பாளராகும் ஆசை வந்துள்ளது.
'யோகி அன்ட் ஃப்ரெண்ட்ஸ்' எனற பட நிறுவனத்தை தொடங்கி 'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் அசார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். வம்சி ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை, பாண்டிச்சேரி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ள 'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' காமெடி கலந்த ஃபேண்டசி காதல் திரைப்படமாம்!
'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' படத்தின் தயாரிப்புக்கு வெளிநாட்டில் உள்ள ரெஹைனாவின் சில நண்பர்கள் பைனான்ஸ் செய்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் தன்னுடைய மகன் ஜி.வி.பிரகாஷ் குமாரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரெஹைனா.