ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்கள் என்றால் இயல்பாகவே அந்தப்படங்களின் மீது இரு மடங்கு எதிர்பார்ப்பு எழுவது சகஜம்.. அப்படித்தான் மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் இந்தமாதம் ரம்ஜான் ரிலீசாக வெளியான 'கசபா' படம் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்தனர்.. ஆனால் பக்காவான ஆக்சன் காட்சிகளும், திருப்பங்களும் இல்லாமல் சவசவ என சாதாரண ஒரு போலீஸ் படமாகவே இருந்தது ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றியது.. இந்த நிலையில் மலையாள போலீஸ் படங்கள் வரிசையில் அடுத்த படமாக வெளியாக இருப்பது 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம்'.. சுருக்கமாக சொன்னால் ஐ.டி.ஐ.
இந்தப்படத்தில் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.. அவருக்கு போலீஸ் வேடம் புதிது அல்ல என்றாலும், ஒரு ஹீரோவாக பக்கா ஆக்சன் போலீஸாக நடித்திருப்பது இது தான் முதல்முறை.. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து ஜெயசூர்யாவின் திரையுலக நண்பர்களான சக நடிகர்களே, “ஏம்ப்பா நிச்சயமா நீதானா அது..?” என சந்தேக கேள்வி எழுப்பினார்களாம். அந்த அளவுக்கு 'மாஸ்' ரோலில் தான் ஜெயசூர்யா நடித்துள்ளாராம். இந்தப்படத்தை சாஜித் யாஹியா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். எனவே, மம்முட்டியால் ஏற்பட்ட மனக்காயத்திற்கு இந்த படம் களிம்பு பூசும் என்றே தோன்றுகிறது.