கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமீபகால சினிமா நடிகர்கள் மத்தியில் பெரிதாக போட்டி, பொறமைகள் என்பது இல்லை. தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதோடு, ஒரு நடிகர் சிறப்பாக நடித்திருந்தால் அவரை தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். அந்த அளவுக்கு ஈகோ என்பது தற்போதைய இளவட்ட சினிமா நடிகர்கள் மத்தியில் துளியும் இல்லை.
மேலும், தங்களது ரசிகர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உதவிக்கரம் நீட்டுவது. அவர்களின் இல்ல திருமணங்களில் கலந்து கொள்வதையும் சில ஹீரோக்கள் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்களது அபிமான நடிகரை காண வேண்டும் என்று ஆசைப்பட்டால், அந்த செய்தி தங்களுக்கு கிடைத்ததும் உடனே சென்று பார்த்தும் வருகிறார்கள்.
அப்படி விஜய் பல நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார். அதேபோல் இப்போது தனுஷ், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் ரத்த புற்று நோய் சிகிச்சை பெற்று வரும் கோடீஸ்வரி என்ற 12 வயது சிறுமி, தன்னை காண ஆசைப்படுவதாக சொன்னதை அறிந்து உடனே அந்த சிறுமியை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.