ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப்பிறகு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் வடசென்னை. ஆடுகளம் படம் வெளியான நேரத்தில் இந்த படத்தை சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். ஆனால் அதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. அதோடு வெற்றிமாறனும் படம் இயக்குவதை சில ஆண்டுகளாக தள்ளி வைத்து விட்டு, வசனம் எழுதுவது, படம் தயாரிப்பது என்று கவனத்தை திருப்பியிருந்தார். பின்னர் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது மீண்டும் தனுசுடன் வடசென்னை படத்துக்காக கைகோர்த்திருக்கிறார். இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் தனுசுடன் விஜயசேதுபதி, சமுத்திரகனி, கிஷோர், அமலாபால், ஆண்ட்ரியா, கருணாகரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். தற்போது வடசென்னை படப்பிடிப்பு சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்டமாக தனுஷ் ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன். வடசென்னை தமிழ் பேசியபடி அவர் கலாட்டா செய்வதும், பின்னர் ஜெயிலர் வந்து அவரை கண்டிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் என்ன தவறு செய்து விட்டு ஜெயிலுக்குள் சென்றார் என்பது போன்ற விசயங்கள் அடுத்தகட்டமாக படமாக்கப்பட உள்ளதாம்.