தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான காமெடி நடிகர் தான் சுராஜ் வெஞ்சாரமூடு.. காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்தவர், பின்னர் குணச்சித்திர நடிகாரக மாறி, 'பேரறியாதவர்' என்கிற படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர்.. அந்தப்படம் வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. தேசிய விருதுபெற்றபின் அவர் மீது நம் தமிழ்சினிமா இயக்குனர்களின் பார்வையும் விழுந்துள்ளது. அந்தவகையில் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் நடித்துவரும் சுராஜ் இப்போது இன்னொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார்.
அதுவும் நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நடிக்கும் மம்முட்டியுடன்.. ஆம்.. ராம் இயக்கும் பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் அவரது நண்பராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரை இந்தப்படத்திற்கு அழைத்தது இயக்குனர் ராமே தவிர, மம்முட்டி எதுவும் இவருக்கு சிபாரிசு செய்யவில்லையாம். இத்தனைக்கும் 'ராஜமாணிக்கம்' படம் மூலமாக இவரது திரையுலக பாதைக்கு வழிகாட்டியவரே மம்முட்டிதான். சமீபத்தில் மம்முட்டியும் இவரும் ஸ்கூட்டி ஒன்றில் ஒன்றாக பயணிப்பது போன்ற படம் வெளியாகி, இவர் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதி செய்தது. இந்தப்படத்தில் கொடைக்கானல், சென்னை என இரண்டு இடங்கள் தான் கதைக்களம். இதில் கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டனவாம்.