கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கற்பனைக்கு கொஞ்சமும் தடைபோடாத டைம் மிஷின் கதை, அதில் எந்த அளவுக்கு ரசிகர்களை குழப்பாமல் கதை சொல்ல முடியுமோ அதை சரியாக செய்தால் நிச்சயம் வெற்றிதான். ஆனால் பலரும் அந்த ரிஸ்க்கை எடுக்க தயங்குவதால் தான் டைம் ட்ராவல்' சம்பந்தப்பட்ட படங்கள் குறைவாகவே வருகின்றன. அந்தவகையில் தமிழிலாவது 'இன்று நேற்று நாளை' மற்றும் சூர்யா நடித்த '24' படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
ஆனால் வித்தியாசமான கதை சிந்தனை கொண்டவர்கள் எனப்படும் மலையாள சினிமா படைப்பளிகள் இதுநாள் வரை 'டைம் ட்ராவல்' கதையை கையில் எடுக்காமலேயே இருந்தனர்.. இப்போது அறிமுக இயக்குனரான விவேக் அனிருத் என்பவர் முதன்முதலாக மலையாள சினிமாவின் 'டைம் ட்ராவல்' படத்தை இயக்கவுள்ளார்.. இந்தப்படத்திற்கு கடிகார முள்ளின் ஓசையான 'டிக் டாக்' என்கிற டைட்டிலே சிம்பாலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வரும் 2017ல் படப்பிடிப்பை ஆரம்பித்து அந்த வருடமே படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.