தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டியின் மனைவியும் துல்கர் சல்மானின் தாயாருமான சுல்பாத், நிறைய திரைப்பட மற்றும் விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இதுநாள் வரை ஒரு விழா மேடையில் கூட ஏறியதில்லை. ஆனால் அவரை முதன்முறையாக மேடையேற்றியதுடன் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற அவரது மகன் துல்கருகே விருது வழங்கவும் செய்துள்ளது கேரளாவை சேர்ந்த தனியார் டிவி., கடந்த மே மாதம் நடைபெற்ற ஆனந்த் டிவி விருது வழங்கும் விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி, துல்கர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் மம்முட்டியுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நடிகையான ஜூவல் மேரி தான். அவர்தான் துல்கரின் அம்மாவை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் இதுநாள் வரை பார்வையாளராகவே அமர்ந்து பழக்கப்பட்ட சுல்பாத் மேடையேற மறுத்தார். ஆனால் துல்கரும் அவரது மனைவியான சுபியாவும் வற்புறுத்தவே மேடையேறினார்.
ஆனால் விருது வழங்க வேண்டியது தனது மகனுக்கே என்று அறிவிக்கப்பட்டதும் சுல்பாத்துக்கு முகம் நிறைய சந்தோசம். துல்கருக்கும் தனது தாயின் கையால் விருது வாங்கியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதை கீழே அமர்ந்து பார்வையாளராக ரசித்துக்கொண்டிருந்தார் மம்முட்டி. மேமாதம் இந்த விருது விழா நடைபெற்றாலும் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தான் இந்த விபரம் வெளியாகியுள்ளது.