ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தை இயக்கிய இயக்குனர் கொரட்டாலா சிவா மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு காரணம் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா மகேஷ் பாபுதான் என தெரியவந்துள்ளது.
மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் படத்தின் போதே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க மகேஷ் பாபு சம்மதம் தெரிவித்தார். மேலும் அதற்கடுத்ததாக தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜன கண மன எனும் படத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக இயக்குனர் அறிவித்தார். ஆனால் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை ஓரங்கட்டிவிட்டு இயக்குனர் கொரட்டாலா சிவா படத்தில் நடிக்க மகேஷ் பாபு முடிவு செய்துள்ளார்.
ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வரும் கொரட்டாலா சிவா அப்படத்திற்கு பின்னர் ராம் சரண் படத்தை இயக்க ஒப்பந்தமானார், இதற்கிடையில் ராம் சரண் இயக்குனர் சுகுமார் படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார். இதனை அறிந்த மகேஷ் பாபுவின் மனைவி கொரட்டாலா சிவாவை தொடர்பு கொண்டு மகேஷ் பாபுவின் அடுத்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இப்படத்தை தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கலாம் என தெரிகிறது. பூரி ஜெகன்நாத்தின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவியதே நம்ரதாவின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.