டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர்தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்பவர் தான் இந்திரஜித்.. கடந்த 2013ல் மட்டும் பத்து படங்களில் நடித்த இந்திரஜித், அதன்பின் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக்கொண்டுவிட்டார்.. காரணம் நல்ல படங்களை மட்டும் தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்பது தானாம்.
கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'அமர் அக்பர் அந்தோனி' படத்தில் தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்கிய இந்திரஜித், தற்போது 'காடு பூக்குன்ன நேரம்' என்கிற படத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்டறிய காட்டுக்குள் செல்லும் போலீஸ் கான்ஸ்டபிளாக சீரியசான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் நாயகி ரீமா கல்லிங்கல் மாவோயிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளாராம். காமெடி, சீரியஸ், அதேசமயம் வில்லன் என எந்த கேரக்டரிலும் தன்னை பொருத்திக்கொள்ள தயாராக இருக்கும் இந்திரஜித், அடுத்ததாக தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து 'தியான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.