தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் வெளிவரும் படங்களில் எங்கே கதை இருக்கிறது என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் அடடா... அற்புதமான கதை என தமிழ்ப் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ப் படங்கள், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அடிக்கடி ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் மற்ற மொழிகளில் அதிக கவனத்தைப் பெறும். தமிழில் வெற்றி பெற்ற கத்தி படத்தை தெலுங்கில் தற்போது சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தை சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடிக்க துருவா என்ற பெயரில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து அந்த வரிசையில் சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் சேர்ந்து கொண்டுள்ளார்.
பவன் கல்யாண் அடுத்து நடிக்க உள்ள படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாக இருந்தது. ஆனால், அதற்குள் சூர்யாவுக்கு முருகதாஸ் - மகேஷ்பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பவன் கல்யாண் நடிக்கும் படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார்கள். அவரால் பவன் கல்யாணுக்கு ஏற்ற கதையை சரியாக உருவாக்க முடியவில்லையாம். எனவே, அஜித் நடித்த வீரம் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்களாம். அப்படியே செய்தால் சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோருக்கு அடுத்து பவனும் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரே என்ற பேச்சு தெலுங்கு கதையாசிரியர்களிடம் அதிகம் வரும் என்று பவன் யோசித்தாராம். அதனால், வீரம் படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு மாதிரியான திரைக்கதை அமைக்கச் சொல்லியிருக்கிறாராம்.
வீரம் என்பது படத்தில் மட்டுமல்ல ரீமேக் என்பதை வெளிப்படையாகச் சொல்வதிலும் இருக்க வேண்டுமல்லவா...!