ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இது என்ன மாயம் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வந்த வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. அதையடுத்து முடிசூடா மன்னன் என்ற படத்தில் அவர் நடித்து வந்தார். அஜீத்தின் 57வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த முடிசூடா மன்னன் படத்தில் விக்ரம் பிரபு 10 நாட்கள் நடிக்க வேண்டியிருந்ததாம். அதற்குள் அவர் நெருப்புடா படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பையும் தொடங்கியிருந்தார்.
இந்த நேரத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அஜீத் பட வேலைகளில் இறங்கயிருக் கும் சத்யஜோதி பிலிம்ஸ், அதற்கு முன்னதாக விக்ரம் பிரபு படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்பதற்காக, அவரை அழைத்து, படப்பிடிப்பை முடித் துக்கொடுத்து விடுங்கள் என்று கூறினார்களாம். அதன்காரணமாக, நெருப்புடா படப்பிடிப்பை 10 நாட்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு, முடிசூடா மன்னனில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இன்னும் 5 நாட்களில் அந்த படத்தில் நடித்து முடித்ததும் மீண்டும் நெருப்புடா படப்பிடிப்பை கலந்து கொள்கிறாராம் விக்ரம் பிரபு.