'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். அதையடுத்து மஞ்சப்பை என்ற படத்தை தயாரித்த அவர், தற்போது நயன்தாரா நடிப்பில் டோரா என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை முதலில் சற்குணம்தான் தயாரித்து இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் மாதவனை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் நயன்தாரா நடிக்கும் டோரா படத்தை தனது உதவியாளர் தாஸ் ராமசாமியை இயக்க வைத்தார். திருநாள், காஷ்மோரா, இருமுகன் படங்களில் நடித்துக்கொண்டே இந்த படத்திற்கும் அவ்வப்போது கால்சீட் கொடுத்து நடித்து வந்த நயன்தாரா இப்போது டோரா படத்தில் நடித்து முடித்து விட்டார்.
நயன்தாரா நடித்து வெளியான மாயா படத்தைப்போன்று இந்த படமும் வித்தியாசமான ஒரு ஹாரர் கதையில் உருவாகியிருக்கிறதாம். மேலும், அப்பா வேடங்களை தவிர எந்த வேடங்கள் என்றாலும் நடிப்பேன் என்று கூறிவரும் தம்பி ராமைய்யா, தனிஒருவனைத் தொடர்ந்து இந்த படத்திலும் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனால், தனிஒருவனின் அரவிந்த்சாமியின் அப்பாவாக முக்கியமான வேடத்தில் நடித்தது போன்று இந்த படத்திலும் தம்பி ராமைய்யாவுக்கு ரொம்ப முக்கியமான வேடமாம். அதனால்தான் அப்பா வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கடைபிடித்து வந்த தனது கொள்கையை தளர்த்தி, டோரா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக ஆக்டு கொடுத்துள்ளாராம் தம்பி ராமைய்யா.