ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் தமிழ் ரசிகர்களுக்கு நேரடி பழக்கம் இல்லாவிட்டாலும் விபரம் சொன்னால் அட அவரா இவர் என்பார்கள்.. ஆம் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானதோடு, தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரேமம்' ஆகிய படங்களின் தயாரிப்பளார் இவர் தான். அட.. தயாரிப்பாளராக்கும் என சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.. அடிப்படையில் இவர் மிகச்சிறந்த இயக்குனர். ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது.
11 வருடங்களுக்கு முன்னரே 23 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்தது. மம்முட்டிக்கு காமெடி வராது, ஒர்க் அவுட் ஆகாது என அதுவரை இருந்த மாயையை அடித்து தகர்த்தது. அப்படிப்பட்ட அமர்க்களமான அறிமுகத்தை மெகாஸ்டார் மம்முட்டி மூலம் பெற்று, அவருக்கும் வெற்றியை பரிசாக தந்த அன்வர் ரஷீத், மேலும் மம்முட்டிக்கு கைமாறு செய்யும் விதமாக அவரது மகன் துல்கர் சல்மானின் இரண்டாவது படத்தை தானே இயக்கினார்.. அதுதான் துல்கரின் திரையுலக வாழ்க்கையை வெற்றிப்பாதையில் திருப்பிய உஸ்தாத் ஹோட்டல்.இவ்வளவு அருமை பெருமைகளை உடைய அன்வர் ரஷீத் கூட்டணி 2008ல் 'அண்ணன் தம்பி' என மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தாலும் அதன்பின் மீண்டும் கை கோர்க்கவில்லை.. இப்போது கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இணைகிறார்கள் என்பது மம்முட்டி ரசிகர்களுக்கு உற்சவம் போலத்தான். பஹத் பாசில் மார்க்கெட் சரிந்து கிடந்ததால் அவரை கைதூக்கிவிடும் விதமாக, 'மணியறையில் ஜின்னு' என்கிற படத்தை இயக்க அன்வர் திட்டமிட்டிருந்தார். இப்போது பஹத் பாசிலுக்கு 'மகேஷிண்டே பிரதிகாரம்' மூலம்' மார்க்கெட் ஸ்டெடியானதால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்முட்டி படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பது போனஸ் தகவல்.