தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, ஸ்ரேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்போது முதல் கட்டப் படப்பிடிப்பை எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்துள்ளனர். அது குறித்த மகிழ்ச்சியை படத்தின் இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்சனைகளால் கடைசி கட்டத்தில் அப்படியே நின்றுவிட்டது. அதை முடித்துக் கொடுக்காமல் சிம்பு உடனே 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டப் படப்பிடிப்பில் சிம்பு 80களில் இருந்த இளைஞர்களைப் போன்ற தோற்றத்தில் படத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிக்க ஸ்ரேயாவை திடீரென ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பையும் நடத்தி விட்டனர்.
இந்தப் படத்தில் ஒவ்வொன்றுமே திடீர் திடீரென நடக்க ஆரம்பிக்கிறது. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் 'வாலு' படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்குவதாக இருந்தது. அதன் பின் இயக்குனர் மாற்றப்பட்டு ஆதிக் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அடுத்து இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜாவை திடீரென ஒப்பந்தம் செய்து பாடல்களையும் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாயகியாக யார் யாரிடமோ கேட்டுப் பார்த்து யாரும் சம்மதிக்காத நிலையில் திடீரென ஸ்ரேயாவை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள்.
இதே வேகத்தில் படப்பிடிப்பு முடிந்தால் நன்றாக இருக்கும். சிம்பு படங்களின் முந்தைய படங்களின் நிலை இந்தப் படத்திற்காவது வராமல் இருந்தால் நல்லது.