மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
‛ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' படம் தொடங்கி ‛தில்வாலே' படம் வரை படத்திற்கு படம் வித்தியாசம் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் பாலிவுட் நடிகர் வருண் தவான். இப்போது நடிகர் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‛டிஷ்யும்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வருணின் சகோதரர் ரோகித் தவான் இயக்கியுள்ளார். இந்தவாரம்(ஜூலை 29ம் தேதி) திரைக்கு வர இருக்கும் இப்படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
இந்தப்படத்தில் நடிக்க காரணம் என்ன?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் என்னுடைய சினிமா கேரியர் தொடங்கியதிலிருந்தே ஒரு ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சிறு வயதிலிருந்தே அக்ஷ்ய் குமார், அஜய்தேவ்கன் ஆகியோரின் ஆக்ஷன் படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். எனவே நானும் ஆக்ஷ்ன் படம் பண்ண வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அந்தச்சூழலில் டிஷ்யும் படம் வாய்ப்பு வந்ததும் உடன் ஒப்புக் கொண்டேன். இப்படம் ஒரு ஆக்ஷ்ன், திரில்லர் படம். அத்துடன் படத்தில் காமெடி, சஸ்பென்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது என்னுடைய சகோதரர் இயக்கும் படம்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
ஜூனைத் அன்சாரி எனும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் நான் ஹீரோ கிடையாது, ஆனால் ஹீரோவாக முயற்சிப்பேன். ஒருஎதிர்பாராத சூழலில் நான் ஹீரோவாகும் சூழல். என் கேரியரில் நான் நடித்திராத ஒரு ரோல்.
இந்தப்படத்தில் ஆக்ஷ்ன், காமெடி என இரண்டிலும் நடித்திருக்கிறீர்கள், இது உங்களுக்கு சிரமத்தை தந்ததா?
உண்மை தான் டிஷ்யும்-ல் நான் ஆக்ஷ்ன், காமெடி என இரண்டிலும் நடித்துள்ளேன். ஒருகாட்சியில் நான் காமெடி செய்து கொண்டிருப்பேன், சில நிமிடங்களிலேயே ஆக்ஷ்னிலும் நடித்திருப்பேன். இது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அதிலும் காமெடி செய்வது ரொம்பவே சிரமமாக இருந்தது. என்னுடைய சகோதரர் என்னிடம் வித்தியாசமான காமெடிகளை எதிர்பார்த்தார், அவரின் ரசனைக்கு ஏற்றபடி காமெடி செய்தேன். ஒருகாட்சியில் எனக்கு நாயுடன் நடிக்கும் காட்சி உள்ளது. அந்தக்காட்சிக்காக மட்டும் சுமார் 6 முறைக்கு மேல் டேக் வாங்கினேன்.
சகநடிகர்களுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
ஜாக்குலின் பெர்ணான்டஸ் அருமையான நடிகை. எப்போதும் அவரின் முகத்தில் சிரிப்பை காணலாம். அவருடன் சண்டைக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறேன். குழந்தை பருவம் முதல் ஜானை எனக்கு தெரியும். என்னைவிட அவர் வயதானவர் தான், ஆனால் அப்படியொரு நினைப்பே அவரிடத்தில் நான் கண்டதில்லை. என் வயதுக்காரர் போன்று என்னுடன் பழகினார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. படத்தில் மற்றொரு நடிகரும் இருக்கிறார், அவர் தான் அக்ஷ்ய் கண்ணா, படத்தின் முக்கியமான நடிகரே அவர் தான். மிகவும் அருமையான, திறமையான நடிகர்.
டிஷ்யும் என்றால் ‛பன்ச்', யாருக்கு நீங்கள் டிஷ்யும் கொடுப்பீர்கள்?
இன்றைக்கு சினிமாவிற்கு பேராபத்தாக இருப்பது திருட்டு விசிடி தான். சமீபகாலமாக கிரேட் கிரான்ட் மஸ்தி, உட்தா பஞ்சாப், சுல்தான் போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்த திருட்டு விசிடியால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே திருட்டு விசிடி கும்பலுக்கு ‛பன்ச்' வைப்பேன். அதேப்போன்று பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ‛பன்ச்' வைப்பேன். பயங்கரவாதத்தால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
படம் ரிலீஸாகும் போது உங்களின் மனநிலை எப்படியிருக்கும்?
முதலில் நான் நானாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டுள்ளார்கள். ஒருபடம் ஹிட்டாகும்போது எனக்கு முழு திருப்தியை தருகிறது. அதேசமயம் அடுத்தப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இன்னும் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போது, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையில் நான் இருப்பேன்.
இவ்வாறு வருண் தவான் கூறியுள்ளார்.