டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினி சினிமாவுக்காக காலம் காலமாக தொடர்ந்து வந்த சினிமா மரபுகள் கபாலி படத்தில் மீறப்பட்டுள்ளது என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அதில் வழக்கமான சில சென்டிமென்ட் விஷயங்களும் மாற்றப்பட்டதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. குறிப்பாக ரஜினி படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்காதது. ரஞ்சித் இயக்குனர் என்பதால் அவருடன் இணைந்து பயணிக்க கூடிய சந்தோஷ் நாராயணனையே இதில் இசையமைப்பாளராக போடச்சொல்லி ரஜினியிடம் ஒப்புதலும் வாங்கிவிட்டார்.
ஆனால் இதில் என்ன விஷயங்கள் நசுங்கி போயின தெரியுமா..? வழக்கமாக ரஜினி படங்களில் தவறாது இடம்பெறும் எஸ்.பி.பியின் ஓப்பனிங் பாடல் இல்லை.. கவிஞர் வைரமுத்துவின் பாடல் இதில் இடம்பெறவில்லை.. அவரது மகன் மதன் கார்க்கியின் பாடலும் இதில் இடம்பெறவில்லை. பாடல்கள் எழுதும் வாய்ப்புகளை எல்லாம் தனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஆட்களுக்கே கொடுத்துவிட்டார் ரஞ்சித். அதிலும் புதுமுகம் அருண்ராஜா காமராஜ் எழுதிய நெருப்புடா பாடல் செம மாஸ் பாடலாக அமைந்தது.
இது எதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது தெரியுமா..? ரஜினியின் ஆத்மார்த்தமான நண்பரான வைரமுத்து, ரஜினி படத்தில் கோட் போட்டிருப்பதை விமர்சித்து, கபாலி படம் தோல்வி என்று அழுத்தி சொல்லும் அளவுக்கு வைரமுத்துவை தள்ளியுள்ளது.. இரண்டு தினங்களுக்கு முன் அரிமா சங்கம் சார்ந்த விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து பேசும்போது அந்தக்கூட்டத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், கபாலி படத்தை பற்றி மதிப்பு குறைவாக பேசும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.
அதில் அவர் பேசியிருப்பது இதுதான்.. “கபாலிக்கு முன்னாடியே கோட் போட்டவர் நீங்க தான்னு நெனைக்கிறேன்... உங்களைப் பார்த்து தான் இரஞ்சித் காப்பிடியடிச்சு ரஜினிக்கு போட்டு படம் ஓடிட்டிருக்கு...... (இடையில் நாக்கை சுழட்டுவது.. அட்டகாசமாக புன்னகைப்பது வேறு)... நான் புரிந்துகொள்கிறேன்... ஒவ்வொருவரையும்... இந்த கூட்டத்த... வந்திருக்கிற பெருமக்கள... அரசியல விஞ்ஞானத்த... இல்லறத்த வாழ்வியல... ஆண... பெண்ண... தொலைந்துபோன விமானத்த... கபாலியின் தோல்விய... கபாலியின் தோல்விய... எல்லாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
இவ்வாறு பேசியுள்ளார் வைரமுத்து.
தொலைந்து போன விமானத்தை பற்றி இவர் என்ன புரிந்துகொள்கிறார் என தெரியவில்லை. ஆனால் கபாலி படம் தோல்வி என இவர் பகிரங்கமாக பேசவேண்டும் என்றால் அதற்கு ஒரே காரணம், இந்தப்படத்தில் பாடல் எழுத அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது தான். அதிலும் ரஜினி இந்த விஷயத்தில் எதுவும் தலையிட்டுக் கொள்ளாததும் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
இந்த வீடியோவில் கபாலி தோல்வி என சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு சந்தோஷமும் தெரிகிறது. கோட் பற்றி பேசும்போது நக்கல் தெறிக்கிறது. இவர் இப்படி பேச வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்கிற ரீதியில் ரஜினி ரசிகர்கள் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.