'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இதுநாள் வரை தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா ஒரே ஹீரோவுடன் இன்னொருமுறை இணைந்து நடித்தால் அதுவே ஆச்சர்யமான விஷயம் தான். ஆனால் சாதனையிலும் சாதனையாக மலையாள மெகாஸ்டார் மம்முட்டியுடன் நான்கு படங்களில் இணைந்து நடித்துவிட்ட நயன்தாரா, அடுத்ததாக ஐந்தாவது படத்திலும் இணைந்து நடிக்கவுள்ளார். ஐயா, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துகொண்டே மலையாள திரையுலகிலும் பயபக்தியோடு இருந்துவந்த நயன்தாரா, அந்த காலகட்டத்தில் 2005ஆம் வருடமே 'தஸ்கர வீரன்' மற்றும் 'ராப்பகல்' ஆகிய படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்..
அதன்பின் முன்னணி நடிகையாக மாறியபின் போனால் போகிறதென்று ஒன்றிரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்தவர், கடந்த வருடம் மம்முட்டியுடன் மூன்றாவது முறையாக 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் ஜோடி சேர்ந்தார்.. அந்தப்படம் ஹிட்டாகவே அதே சூட்டோடு மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'புதிய நியமம்' படம் இந்த வருட ஆரம்பத்தில் ரிலீசானது.. அட.. ஒரே வருடத்தில் ஒரே நடிகருடன் தொடர்ந்து இரண்டு படமா என்கிற ஆச்சர்யம் அடங்குவதற்குள் இதோ, அடுத்த படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்துவிட்டது.
'மை டாட் டேவிட்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய படத்தை ஹனீப் அதேனி என்னும் புதிய இயக்குனர் இயக்கவுள்ளார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.. இந்தப்படத்தை தங்களது ஆகஸ்ட் சினிமா நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் நடிகர் பிருத்விராஜ். கடந்த 2013ல் மம்முட்டியை வைத்து ரஞ்சித் டைரக்சனில் 'கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி' என்கிற படத்தையும் பிருத்விராஜ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.