ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹீரோ ஒரு அடி அடித்தால் எதிரிகள் தாறுமாறாக பறந்து போய் விழ வேண்டும். அதுதான் மாஸ் பைட். மக்களின் மைண்ட் செட்டும் அப்படித்தான் உள்ளது. அதனால் லைவ் சண்டை காட்சிகள் ஆடியன்ஸை திருப்திப்படுத்தாது என்கிறார் பைட் மாஸ்டர் நாக்அவுட் நந்தா.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
ஹீரோ ஒரு அடி அடித்தால் வில்லன் பறந்து போய் விழ வேண்டும். அப்படி சினிமாத்தனமாக பண்ணினால்தான் மாஸாக இருக்கும். அந்த மாதிரி சண்டை கட்சிகளாக பார்த்து பார்த்து மக்களின் மைண்ட் செட்டும் அப்படியாகி விட்டது. முக்கியமாக, அஜீத், விஜய் பைட் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்றாகி விட்டது. அப்படியிருக்கையில் அவர்களை போன்றோர் லைவ் பைட் பண்ணினால் ஆடியன்ஸ் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களை திருப்திபடுத்தாது.
அதேசமயம், புது ஹீரோக்கள் பண்ணினால், ஒத்துக்கொள்வார்கள். நான்கூட அப்புக்குட்டி நடித்த மன்னாரு படத்தில் ஒரு லைவ் பைட் வைத்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது பேசப்பட்டது. எனக்கு அந்த மாதிரி பைட் பிடிக்கும் என்றாலும், பிரமாண்டம்தான் சினிமா என்றாகி விட்டது. அதனால் நான் லைவாகத்தான் பைட் பண்ணுவேன் என்று பண்ணினால் நாம் ஓரங்கட்டப்படுவோம். இந்த மாஸ்டருக்கு பைட்டே தெரியவில்லை என்பார்கள். ஆடியன்ஸின் இந்த ரசணை காரணமாகத்தான் புதிதாக வரும் ஹீரோக்கள்கூட பத்து பேரை பந்தாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஹாலிவுட் படங்களின் பைட்களுக்கு மத்தியில் கோலிவுட் பைட் ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்தும் என நினைக்கிறீர்கள்?
ஹாலிவுட் படங்களான பைடர்மேன், காட்ஸில்லா போன்றவை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வடிவமாகத்தான் இருக்கும். அவர்கள் பிரமாண்டங்களை வெறும் கற்பனையில் மட்டுமே பார்த்து வருகிறார்கள். ஆனால் நம்ம ஊர் படங்கள் வாழ்வியலை சொல்வதாக இருக்கும்.
சண்டை காட்சிகளும், நமது நேட்டிவிட்டியுடன் கலந்து சொல்லப்படுவதால் ஹாலிவுட் படங்களின் பிரமாண்டத்தை ரசித்தபோதும், நம்ம படங்களின் சண்டை காட்சிகளை மட்டமாக நினைக்க மாட்டார்கள். ஹாலிவுட் படங்களை பிரமிப்புடன் ரசிக்கும் ரசிகர்கள்கூட, நம்ம ஹீரோக்கள் சண்டை செய்வதை தாங்களே வில்லன்களை அடித்து துவம்சம் செய்வது போன்று கற்பனை செய்து கொள்வார்கள். ஆக, இந்தியப் படங்கள்தான் ரசிகர்களின் உணர்வோடு ஒன்றியிருக்கிறது.
உங்கள் பெயருக்கு முன்பு நாக்அவுட் என்று அடைமொழி வைத்திருப்பதேன்?
ஒரு பஞ்ச் கொடுத்தால் ஒருவர் காலியாகி விடுவார். அதுதான் நாக்அவுட் பஞ்ச். இந்த மாதிரி பைட்டுக்கு அதிரடியான சண்டை சூழல் வேண்டும். அதோடு, விஜய், அஜீத் , சூர்யா, விஷால் என முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் சண்டை காட்சிகளில் இந்த மாதிரி பஞ்ச் கொடுப்பது சரியாக இருக்கும். நான் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி சரியான படங்கள் கிடைக்கும்போது நாக்அவுட் பஞ்ச் என்றால் என்ன என்பதை சரியாக வெளிப்படுத்துவேன்.
உங்களை பிரமிக்க வைத்த பைட் மாஸ்டர்கள் யார் யார்?
ஜாகுவார் தங்கம், கனல் கண்ணன், சூப்பர் சுப்பராயன். என்னை பிரமிக்க வைத்தவர்கள் இவர்கள்தான். சினிமாவுக்கென்றே பிறந்தவர்கள். சிறந்த பைட் மாஸ்டர்கள். இவர்கள் கற்றுக்கொடுத்த வித்தையைத்தான் நான் பிரதிபலித்து வருகிறேன்.
சமீபகாலமாக பைட் மாஸ்டர்களே நடிகர்களாகி வருகிறார்களே?
நான் பைட்டராக இருந்தபோது நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால் பைட் மாஸ்டர் ஆனபிறகு நடிப்பு ஆர்வம் போய் விடடது. இந்நிலையில், என்னையும் சில படங்களில் நடிக்கக்கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். இருப்பினும் திருப்பூர் என்ற படத்தில் ஒரு பாடலில் நடன மாடியிருக்கிறேன். அதில் ஆட இருந்த நடிகரால் திடீரென்று வர முடியவில்லை. அதனால் என்னை ஆட சொன்னார்கள். தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த பாடலில் நடனம் ஆடினேன்.
மேலும், பெரிய நடிகர்களின் படங்களில் பெரிய அளவில் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. இப்போதைக்கு நான் சிறிய பட்ஜெட் படங்களாகத்தான் பண்ணி வருகிறேன். ஆனால் அப்படி நான் சண்டை காட்சி அமைக்கும் படங்கள் வெற்றி பெறும்போது அந்த பெரிய வாய்ப்புகள் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் நாக்அவுட் நந்தா.