ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மாவான மேனகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னாள் கதாநாயகி.. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 'நெற்றிக்கண்' என்கிற படத்தில் ஜோடியாக நடித்தவர்.. 'கபாலி' படம் ரிலீஸான தினத்தன்றே திருவனந்தபுரத்தில் மாலை 6 மணி காட்சியை பார்த்த மேனகா பரவசத்துடன், “அன்று பார்த்த அதே ரஜினிதான்.. இன்னும் மாறவே இல்லை” என சிலாகித்துள்ளார். மேலும் பலவருடங்களுக்கு பிறகு நேரில் ரஜினியை சந்தித்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மகள் கீர்த்தி சுரேஷ் நடிகையாவதற்கு முன்பு சென்னையில் படித்துக்கொண்டு இருந்த நேரம். அப்போது ரஜினியை சந்தித்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே, இப்போதையை நிலையில் மீண்டும் அவரை ஒருமுறை பார்த்துப்பேச வாய்ப்பு கிடைக்குமா என விரும்பினாராம் மேனகா. தனக்கு தெரிந்த சினிமா தொடர்பாளரிடம் தனது ஆசையை தெரிவித்தாராம். இதை அவரே மறந்துவிட்ட நிலையில், சில மாதங்கள் கழித்து திடீரென ரஜினியிடம் இருந்து போன் வந்ததாம்.. இதை எதிர்பார்க்காத மேனகா வீட்டில் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தே விட்டாராம்.. அவ்வளவு மரியாதை ரஜினி மீது..
போனில் பேசிய ரஜினி தனக்கு ஐந்து நாட்கள் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் இருப்பதாகவும் ஐந்தாவது நாள் மாலை சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டாராம். மேனகாவை விட மகள் கீர்த்தி சுரேஷுக்கு பயங்கர குஷி.. சென்னையில் இருந்து உடனே கேரளாவுக்கு பறந்துவந்து விட்டாராம். சம்பந்தப்பட்ட நாளன்று ரஜினியை சந்தித்த மேனகா அப்படியே அசந்துபோனாராம். இத்தனைக்கும் 30 வருடம் கழித்த சந்திப்பு அது.. அதே எளிமையுடன் வரவேற்ற ரஜினி, நெற்றிக்கண் பட நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி பேசி மேனகாவையும் கீர்த்தி சுரேஷையும் வியப்பில் ஆழ்த்தினாராம்.
நெற்றிக்கண் பட ஷூட்டிங் சமயத்தில் மேனகாவுக்கு ரஜினி ஒரு வாழ்க்கை தத்துவம் ஒன்றை சொன்னாராம். அதாவது, “உன்னைச்சுற்றி இருக்கும் பலர் உன்னிடம் பல விஷயங்களை கூறுவார்கள்.. உனக்கு உகந்தது என்றால் தயங்காமல் ஏற்றுக்கொள்.. இல்லையென்றால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அதை புறக்கணித்துவிடு” என்றாராம். அதுதான் தனக்கு பல சந்தர்ப்பங்களில் முடிவெடுக்க உதவியது என்று ரஜினி பற்றி நெக்குருகி பேசியுள்ளார் மேனகா.