'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. கபாலி படம் பற்றிய ரசிகர்களின் கருத்து எப்படி இருந்தால் என்ன?, 'தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வசூலில் எப்போதும் நான் தான் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆமாம், கபாலி படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் கபாலி படத்தின் கிளைமாக்ஸ், இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியைப் போல் அமைந்திருப்பதால் கபாலி-2 உருவாகும் என இருதினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுப்பற்றி தாணு அளித்துள்ள பேட்டியில் விடையளித்திருக்கிறார்.
அதில் தாணு கூறியிருப்பதாவது... ‛‛கபாலி-2 படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம். ஆனால் அது ரஜினி சாரின் கையில் தான் இருக்கிறது. அவர் சரி என்றால் நான் தயாரிப்பாளராக தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.