'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
கேரளத்து பெண்கள் சிலருக்கு மட்டும் நடிகையாகி பெரும் புகழும் கிடைக்கும் வரமும், அதேசமயம் பிரபல நடிகையானபின் குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவும் சாபமும் என இரண்டையும் ஒருசேரத்தான் இறைவன் படைத்துள்ளானோ என என்னும் விதமாகத்தான் நிகழ்வுகள் நடக்கின்றன. சரிதாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி, மஞ்சு வாரியர், மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன் என முன்னணி நடிகைகளாக கோலோச்சிய மலையாள நடிகைகள் பலரும் தங்களது கணவருடன் பிணக்கு ஏற்பட்டு மணவாழ்க்கையில் இருந்து பிரிந்தே இருக்கின்றனர்.. அவர்கள் செய்தது காதல் திருமணமோ, அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் ரிசல்ட் இதுதான்..
அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலாபாலுக்கும் அவரது கணவருக்கும் கூட கருத்து வேறுபாடு என்றும், விவாகரத்துக்கு முடிவு செய்துள்ளார்கள் என்றும் கூட செய்திகள பலவாறாக வெளியாகி வருகின்றதை பார்க்கும்போது மீண்டும் இன்னொன்றா என்கிற சங்கடம் தான் ஏற்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இணைந்த நடிகை மீரா ஜாஸ்மினோ தானும் தன கணவரும் மற்றவர்கள் நினைப்பது போல சாதாரண தம்பதி அல்ல என்றும், தான் படங்களில் மீண்டும் நடிக்க வந்ததே தனது கணவர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்கிறார். இருவருக்குமான அடிப்படை உணர்வுகளை ஒருவருக்கொருவர் மதிக்கும்போது அங்கே பிரிவுக்கு வழியேது என்கிறார் மீரா ஜாஸ்மின்.