விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஒரு படத்தில் நடித்து பேர் எடுத்து விட்டால் போதும், அதன் பிறகு சில நடிகைகளின் அலப்பறை சொல்ல முடியாது. தான் என்னவோ தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடித்தார் போல எங்கிருந்தோ வந்து ஒட்டி கொள்கிறது அந்த இருமாப்பு. அதுவும் கபாலி போன்ற பெரிய நடிகர் படத்தில் துக்கடா ரோலில் நடித்தவர் ரித்விகா. இயக்குனர் ரஞ்சித், கபாலி சூப்பர் ஸ்டார் படமாக இருந்தும் தன்னோடு இரண்டு படங்களில் பயணித்தவர்கள் என்ற முறையில் பலருக்கும் வாய்ப்பு தந்தார். ஆனால் கபாலி படம் வெளிவரும் முன் ரித்விகாவை கையால் பிடிக்க முடியவில்லை. கபாலியில் தான் என்னவோ மிக முக்கிய கதாபாத்திரம் என்று அலப்பறையை அள்ளி விட்டவர், கடைசியில் படம் பார்த்தவர்களுக்கு இவர் நடிப்பு இவ்வளவு தானா, இதுக்கா இவ்வளோ பில்ட் அப் என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொண்டது உண்மை. அடுத்தடுத்து சரிவை சந்தித்து வரும் இந்த நடிகை, அடுத்த படத்திலாவது தன்னை திருத்தி கொண்டால் நல்லது என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.