அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பல தோல்விப்படங்களால் கடந்து இரண்டு வருடங்களாக துவண்டு கிடந்த மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரிலீஸான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் இமாலய வெற்றி தான் ஆசுவாசம் கொடுத்தது. அதுமட்டுமல்ல மலையாள சினிமாவில் இந்த வருடத்தையை முதல் பிளாக் பஸ்டர் ஹிட் என்கிற பெருமையையும் இந்தப்படம் பெற்றது. இந்தப்படத்தை திலீஷ் போத்தன் என்கிற அறிமுக இயக்குனர் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருந்தார்.
இந்த வெற்றியின் காரணமாக இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்திலும் இணைந்துள்ளது.. படத்திற்கு 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என வித்தியாசமான டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. ஹீரோ இயக்குனர் மட்டுமல்லாமல், முந்தைய படத்திற்கு இசையமைத்த பிஜிபால், முந்தைய படத்தில் நடித்த காமெடி நடிகர் சௌபின் சாஹிர், குணச்சித்திர நடிகர் அலான்சியர் லே ஆகியோரும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர்.. முந்தைய படத்திற்கு கேரளாவின் கிழக்கு பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இடுக்கியை கதைக்களமாக தேர்ந்தெடுத்தவர்கள், இந்தமுறை கேரளாவின் வடபகுதியான காசர்கோட்டில் படப்பிடிப்பை நடத்தவுள்ளார்கள்.