மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆச்சர்யங்கள், சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும், சேதுபூமி ஆகிய படங்களில் நடித்தவர் தமன் குமார். இதில் சேதுபூமியை அவர் ரொம்பவே எதிர் பார்த்தார். ஆனால் அந்த படமும் தோல்வியடைந்து அவரை ஏமாற்றிவிட்டது. இந்த நிலையில், தற்போது, நடிகை அக்சயா இயக்கி, தயாரித்து நடித்து வரும் யாழி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் தமன். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதை என்றாலும், இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன், இந்த படம் தனக்கு வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
மேலும், இதுவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறி வந்த தமன், அடுத்தபடியாக நெகடீவ் வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராகி விட்டதாக சொல்கிறார். சினிமாவில் ஹீரோவாக இடம் பிடித்து விட வேண்டும் என்று பல படங்களில் நடித்தேன். ஆனால் எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக நெகடீவ் வேடங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன். அப்படி நான் வில்லனாக நடிக்கும் படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் தமன் குமார்.