பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளே தயாராக இருந்தபோதும், பெரிதாக ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத முகம் வேண்டும் என்று தீபா ராமானுஜத்தை விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடிக்க வைத்தார் சசி. அதையடுத்து ரஜினிமுருகன் படத்திலும் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்தார் தீபா. ஆனபோதும் பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி அவருக்கு படங்கள் இல்லை.
ஆனால், பிச்சைக்காரன் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகியிருப்பதை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் தீபா ராமானுஜத்துக்கு மகேஷ்பாபுவின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிச்சைக்காரன் படத்தைப்போலவே வெயிட்டான அம்மாவாக நடிக்கிறாராம் தீபா. பிச்சைக்காரன் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு, அப்படத்தில் நடித்தவர்களின் தெலுங்கு மார்க்கெட் உயர்ந்தபோதும் இன்னும் புதிய தெலுங்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த வகையில், தீபா ராமானுஜத்துக்குத்தான் முதல்வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மகேஷ்பாபுவின் அம்மாவாக தமிழ்,தெலுங்கு, இந்தி என ஒரே படத்தில் மூன்று மொழிகளில் நடிக்கிறார் தீபா.