'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் 'கனல்' என்கிற படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.. இது வெளியாகி கிட்டத்தட்ட பத்து மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் மோகன்லாலின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் மோகன்லால் நடித்த நான்கு படங்கள் தற்போது ரிலீஸுக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கின்றன என்பது ஆச்சர்யம். அவற்றில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளான மெகா பட்ஜெட் படமான 'புலி முருகன்' படம் இந்த ஜுலை மாதமே வெளியாகவேண்டியது.. ஆனால் அதேசமயம் மம்முட்டியின் 'கசபா' படமும் ரிலீஸுக்கு நெருங்கியதால், மோகன்லால் கொஞ்சம் யோசித்தார்.. காரணம் புலிமுருகன்' படத்தை பிரமாண்டமாக அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அவர் விரும்பினார்.
அவரது எண்ணத்தை வலுப்படுத்துவது போல, கபாலி படத்தையும் அவரே ரிலீஸ் செய்யவேண்டிய சூழல் உருவானதால், தனது 'புலி முருகன்' படத்தை அக்டோபர்-7க்கு தள்ளி வைத்துவிட்டார். ஆனால் மம்முட்டியோ தைரியமாக 'கசபா'வை ரிலீஸ் செய்துவிட்டார்.. ஆனாலும் பாவம் படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் கேரளாவில் 'கபாலி' வெளியானதால் 'கசபா'வை நிறைய தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள். இந்த சமயத்தில் மம்முட்டியின் இன்னொரு படமான 'தோப்பில் ஜோப்பன்' படம் அக்டோபர்-7ல் ரிலீஸாகிறது. ஆக மம்முட்டி-மோகன்லால் படங்கள் மோதுவது இப்போது தவிர்க்கப்பட்டாலும் இரண்டுமாதம் கழித்து ஆரம்பிக்க இருக்கும் மோதலுக்கு இப்போதே நாள் குறித்துவிட்டார்கள்.. ஆனாலும் இதிலும் கூட கடைசி நேரத்தில் என்ன மற்றம் வருமோ யார் கண்டது..?