அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மெக்கானிக்கல் என்ஜீனீயராக இருந்து இயக்குனராகியிருக்கிறார் கார்த்திக் நரேன் என்ற 21 வயது இளைஞர். 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என நான்கு குறும்படங்கள் இயக்கி விட்டு 'துருவங்கள் பதினாரு' என்ற படத்தை இயக்கி உள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிசாய் இசையமைத்துள்ளார். 16 மணி நேரத்தில் நடக்கும் கதையில் 16 விதமான கேரக்டர்கள் இடம்பெறுகிறது. இந்த கேரக்டர்களை இணைக்கும் மைய கேரக்டராக ரகுமான் நடித்துள்ளார். இதுபற்றி கார்த்திக் நரேன் கூறியதாவது:
இந்தப்படத்தில் 16 பேர் பாத்திரங்களாக வருகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக உணர வைப்பார்கள். அது மட்டுமல்ல படத்தின் கதை 16 மணி நேரத்தில் நடக்கிறது. எனவேதான் இப்பெயரை வைத்தோம். ரகுமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர் தன் பணியில் நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமுற்றவராகி விடுகிறார். அதனால் பணியைவிட்டுப் போய் விடுகிறார் .ஐந்தாண்டுகள் ஓடி விடுகின்றன. அதற்குப் பிறகு ஒரு பொறி தட்டுகிறது. அன்று, தான் செய்த புலனாய்வு விசாரணையை மறுபடியும் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றவே காட்சிகள் விரிகின்றன. அவைதான் 16 மணி நேரம் நடப்பவை. காதல் காட்சிகளோ, பாடல்களோ கிடையாது. திரைக்கதைக்கு தேவையில்லாத எந்த அம்சமும் படத்தில் கிடையாது. கதை களம் கோவை. 23 நாளில் படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்கிறார் இயக்குநர் கார்த்திக்.