டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியானது. சிலருக்கு பிடித்தும், சிலருக்கு பிடிக்காமலுமான இரண்டு வித முடிவுகளோடும் படம் ஒடிக் கொண்டிருக்கிறது
'கபாலி'யின் கதைப்படி தாதாவான கபாலியை கிளைமாக்சின் கடைசி நிமிடத்தில் அவரை கொல்வதற்கு கபாலி பள்ளியில் படித்த ஒருவனுக்கு பணமும் துப்பாக்கியும் கொடுத்து போலீஸ் அனுப்பும். “ஆயிரம் நல்லது பண்ணினாலும் நீங்க டான்தானே” என்று ஒரு பெண் கேட்க “ஆமா நான் டான்தான், ரவுடிதான்” என்று ரஜினி பதில் சொல்வார். கொலையாளி அருகில் சென்றதும் திரை இருட்டாகும், துப்பாக்கி சத்தம் கேட்கும். கபாலி கொலையாளியை சுட்டுக் கொன்றாரா?. கொலையாளி கபாலியை சுட்டுக் கொன்றானா? என்பதை ரசிகனின் முடிவிற்கே விட்டிருப்பார் இயக்குனர் பா.ரஞ்சித்.
ஆனால் மலேசியாவில் இந்த கிளைமாக்ஸ இல்லை. “ஆமா நான் டான் தான், நான் ரவுடிதான்” என்று ரஜினி சொல்ல... திரை இருட்டாகும் திரையில் கடைசியாக “கபாலி காவல்துறையிடம் சரண் அடைந்தார்” என்கிற வாக்கியத்துடன் படம் முடிகிறது. அதாவது கபாலி கொல்லப்பட வில்லை என்பதுதான் அந்த முடிவு. மலேசிய ரசிகர்கள் ரஜினி மீது அதீத அன்பு வைத்திருப்பதால் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக ஒரு தரப்பினரும். மலேசிய தணிக்கை குழு கபாலி போலீசில் சரண் அடைந்ததாக காட்டினால்தான் மலேசிய போலீசுக்கு மரியாதை இருக்கும் என்று சொன்னதால் மாற்றியதாகவும் கூறுகிறார்கள்.
மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் இதுபோன்று இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியான கிளைமாக்சில் ரஜினிக்காக மம்முட்டி உயிர் விடுவார். மலையாளத்தில் வெளியான கிளைமாக்சில் மம்முட்டிக்காக ரஜினி உயிர்விடுவார். நிஜத்தில் மணிரத்னம் முடிவு செய்திருந்தது ரஜினி உயிர்விடுவதுதான். காரணம் தளபதி படம் மகாபாரதத்தில் உள்ள துரியோதனன், கர்ணன் கதையை தழுவி எடுக்கப்பட்டது. மகாபாரத்தில் துரியோதனனுக்காக போரிட்டு கர்ணன்தான் உயிர் விடுவார். 'தளபதி'யில் ரஜினி நடித்தது கர்ணன் கேரக்டர்.