இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் கடந்த 22ந் தேதி வெளிவந்தது. கர்நாடக மாநிலத்தில் சுமார் 300 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் கபாலி படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி, கன்னட வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டங்களுக்கு வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் “கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் ரஜினி ஒழிக” என்ற கோஷத்தை எழுப்பினர். அதோடு ரஜினி உருவபொம்மை, மற்றும், கபாலி பட போஸ்டர்களை தீயிட்டு கொழுத்தினர். இதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.
போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் கூறும்போது: ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிரானவராகவும் இருக்கிறார். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை ஆதரிக்கிறார். 300 தியேட்டர்களில் 'கபாலி' படம் வெளியிடப்படுவதன் மூலம் கன்னட படங்கள் நசுக்கப்படுகிறது. கன்னட சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்காகவே போராட்டம் நடத்துகிறோம். என்றார்.