ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகை ஐஸ்வர்யராய் கோடை விடுமுறையை கழிக்க தன் தாய் விருந்தாராய் மற்றும் மகள் ஆராத்யாவுடன் லண்டன் சென்றிருந்தார். விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்று அவர் மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தின் வெளியே அவரது மெய்காப்பாளர்கள் அவருக்காக காத்திருந்தனர்.
விமான நிலையத்திற்குள் ஐஸ்வர்யாராய் நடந்த வருவதை பார்த்த பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டனர். கையில் குழந்தையை வைத்திருந்த அவரால் ஆட்டோகிராப் போட முடியவில்லை. இதற்குள் நிறைய கூட்டம் சேரவே அவசர அவசரமாக வெளியேறினார். வெளியே நின்றகூட்டம் அவரை முற்றுகையிட்டது. அப்போது ஓடிவந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது முண்டியடித்த ஒரு ரசிகரை பாதுவாவலர் இடித்து தள்ள அவர் ஐஸ்வர்யா ராயின் அம்மா மீது சாய... அம்மா விருந்தாராய் தரையில் விழுந்தார். இதற்குள் காருக்கு சென்று விட்ட ஐஸ்வர்யா அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையை அவசரமாக காரின் பின் சீட்டில் வைத்து கதவை வேகமாக சாத்தினார். இதனால் காரின் கதவு பட்டு குழந்தை அலறியது. “ஏன் இப்படி பண்றீங்க. நானும் உங்களை மாதிரி ஒரு மனுஷிதானே” என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் கத்தினார். பின்னர் அம்மாவுடன் காரில் ஏறி பறந்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.